Friday open from 07:00 AM to 12:00 PM
அருள்மிகு பர்வதவர்த்தினி உடனுறை இராமநாத சுவாமி திருக்கோவில் திகுநறையூர். is a hindu temple located in Natchiarkoil, Tamil Nadu. The average rating of this place is 5.00 out of 5 stars based on 3 reviews. The street address of this place is WC9V+822, Natchiarkoil, Tamil Nadu 612602, India. It is about 4.08 kilometers away from the Tirunagesvar railway station.
RKS MURUGAN 58 months ago
மனைவி மக்களோடு மகிழ்ந்திருக்கும் சனி பகவான்...!!
இந்தியாவிலேயே வேறு எங்கும் இல்லாத நிலையில்
கோவில் கொண்ட ஸ்தலம் . தசரத சக்ரவர்த்தி அயோத்தியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்து வருகிறார், காலசக்கரத்தால் சனீஸ்வரன் கிருத்திகா நட்சத்திரத்திலிருந்து ரோகிணியை பிளந்துகொண்டு செல்ல இருப்பதை தனது ஆஸ்தான ஜோதிடர்கள் மூலம் அறிந்தார்.
குலக்குருவனா வசிஷ்டரை அணுகி, சனி பகவான் நட்ச்சத்திரபிறேவேஷம் செய்வதால் ஏற்படும் பாதக – சாதக பலன்களை கேட்கிறார் .
வசிஷ்டர்: “ரோகிணியை பிளந்துகொண்டு செல்லும் சனீஸ்வரன், பன்னிரெண்டு ஆண்டுகள் வற்றாத செல்வங்கள் குன்றுவதுடன் பஞ்சம் பெருகும், மக்களும்,விலங்குகளும் மிகமிக அவதியுருவார்கள் ,மேலும் பெரும் தீமைகளும் உண்டாகும்”. என உரைத்தார்.
காலசக்கரத்தை எப்படி தடுத்து நிறுத்தவது.!! ஈஸ்வரனையே பிச்சாண்டியாய் அலையவைத்தவர் அந்த சனீஸ்வரன். இவரிடம் யார் மோதுவது !! என ரிஷிகளும் –யோகிகளும் வழியறியாது விழித்திருந்தனர்.
தசரதர் தன் உன்னதமான தேரில் அமர்ந்து தன்னிடமுள்ள சக்திவாய்ந்த ஆயுதங்களை எடுத்துக்கொண்டு விரைந்து சென்று சூரிய மண்டலத்திற்கு அப்பால் உள்ள ரோகிணி நட்சத்திரத்தை அடைந்தார்.அப்பொழுது வானவீதியில் தங்கமயமான திவ்யரதத்தில் இரண்டாவது சூரியனைப்போல் சனீஸ்வரனை பார்த்தார் !!!
தன் தவவலிமையால் பெற்ற ஸம்ஹாராஸ்திறத்தை தொடுக்க ஆயத்தமானார். “ தசரதமகாராஜனே ! என் பார்வை மட்டுமே பட்டதால் துயர் கொண்டு, உருமாறி, நோய் வந்து, நாடு நகரம் இழந்து, அடிமையாய் சாம்பலாய் போய் வீழ்ந்தவர்களின் விபரம் உனக்கு நன்கு தெரியும்..
அப்படி இருந்தும் என்னுடன் போர் தொடுக்க வந்துள்ளதை கண்டு களிப்புற்றேன். உன் தவவலிமையும், வீரத்தையும் எண்ணி மகிழ்ச்சியடைகிறேன். உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்?” என்று சனீஸ்வரன் வினவ...”..சனீஸ்வரா !! தாங்கள் ரோகிணியை பிளந்துகொண்டு செல்லவேண்டாம் என்றும் , அப்படி செல்லும்போது ஏற்படும் மிக கெடுதியான பலன்களை தவிர்க்க வேண்டும் “ எனவும் தசரதர் கேட்டார்.
சனீஸ்வரபகவானும் ...” அப்படியே ஆகட்டும்” என வரம் அளித்தார். அதனால் சந்தோசம் அடைந்த தசரதசக்கரவர்த்தி பிரம்மபுரி என்னும் இத்தலத்தில் உள்ள சனீஸ்வரபகவானை வணங்கி ஸ்தோத்திரம் செய்தார்.
அந்த ஸ்தோத்திரம்:---------------------------- ௦ ௦ ௦ :-----------------------------------------------நம: க்ருஷ்ணயா நீலாய ஸ்திகண்ட நிபாய சம !
நம : காலக் கிருபாய க்ருதாந்தாய ச வை நம !!
நமோ : நிர்மால்ய தேஹாய தீர்கஸ் மஸ்குஜடாய ச !!
நமோ : விஸால நேத்திராய ஷிஷ்கோதார பயாக்ருதே!!!
நம ; புஷ்கலகாத்ராய ஸ்தூலரோம்னேத வை நம !!!
நமோ : தீர்க்காய ஸிஷ்காய காலதம்ஷ்டர நமோஸ்துதே !!!
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
மேற்கண்ட ஸ்லோகத்தை காலை –மாலை – இருவேளை சொல்லும்போது சனிபகவானால் ஏற்படும் தீமைகள் குறைவாகும்.
மேலும் – ஈஸ்வரனுக்கு நிகரான ஈஸ்வரப்பட்டம் வாங்கிய சனீஸ்வரன் இத்தலத்தில் தன் இருமனைவிகளான மந்தாதேவி.,ஜேஸ்டாதேவி .மற்றும் மந்தாதேவியின்
இருமகன்களாகிய குளிகன், மாந்தியுடன் குடும்ப சகிதமாய் ஆனந்த களிப்பில் அருள்பாலித்து வருகிறார்.
திருமணத்தடை ., குடும்பம் அமைவதில் சிக்கல் , மற்றும் கடகம் – சிம்மராசியில் பிறந்தவர்களுக்கு ஏழாம் வீட்டு அதிபதியாக சனிபகவான் (களத்திரக்கரகன் ) இருந்து வருவதால் அவசியம் மங்கள சனியை வணங்கி வரவேண்டும்..
தசரதருக்கு கொடுத்த வாக்குறுதியின்படி ,, இவ்வாலயத்தில் என்னை வந்து வழிபடுவோருக்கு மற்ற எட்டு கிரகங்களால் ஏற்படும் பாதிப்புகளையும் குறைப்பேன் என்று சொன்ன.....சனீஸ்வரன் வாக்கு சத்தியாமாக்கப்பட்டுள்ளது.
குடும்ப சகிதமாக உள்ள சனிபகவானை வழிபட்டால் அனைத்து தோஷங்களும் விலகும் என்று புராணங்களும் இதையே வலியுறுத்தி சொல்கிறது.
இந்தியாவிலேயே குடும்பத்தோடு உள்ள சனிபகவான் ஆலயம் ....இதுஒன்றுதான்.
16-12-2014 - ந் தேதி செவ்வாய்க்கிழமை மதியம் 2-43 மணிக்கு துலாம் ராசியிலிருந்து விருச்சிகம் ராசிக்கு வருவதால் மேஷராசி . தனுசு ராசி அன்பர்கள் அவசியம் இவரை வந்து வணங்கி –வரும் இடர்பாடுகளை தடுக்க சனிக்கிழமை தோறும் கலியுகக்காரியை கலியுகதங்கத்தை (சனி) கண்டுசெல்வோம்.
இத்தனை பெருமைகள் கொண்ட மங்கள சனிபகவான் நாச்சியார்கோவில் புனிதபூமியின் அடுத்த எல்லைகோட்டில் அமைந்துள்ளது. அதாவது திருநறையூர் எனும் (பிரம்மபுரி ஸ்தலம் ) பகுதியில் இருக்கிறது . கும்பகோணத்திலிருந்து ஒன்பது கிலோமீட்டர் தூரம். கோவிலின் திருநாமம் அருள் மிகு இராமநாத சுவாமி திருக்கோயில். (சனிபகவான் பரிகார ஸ்தலம்.)
Monday | 07:00 AM - 12:00 PM |
---|---|
Tuesday | 07:00 AM - 12:00 PM |
Wednesday | 07:00 AM - 12:00 PM |
Thursday | 07:00 AM - 12:00 PM |
Friday | 07:00 AM - 12:00 PM |
Saturday | 07:00 AM - 12:00 PM |
Sunday | 07:00 AM - 12:00 PM |
N.B. The timetable is based on our last updated data on January 28, 2024.